Sunday, August 4, 2019

சீடர்களுக்காக ஷங்கர்

   
    சீடர்களுக்காக
    ஷங்கர்

    சிஷ்யகோடிக்களே

    நீங்களும் ஞானி தான்.

    உலக இயல்பை தெரிந்து, தெளிந்து, உணர்ந்து கொண்டால்,

   இயல்பை ஏற்றுக்கொண்டு, முரணை தவிர்த்தல், 

   மனஅமைதி கிட்டி, ஆத்ம சாந்தி கிடைக்கும்.

    புரிந்துகொள்வதற்கு:: சந்தோஷம், மகிழ்ச்சி, முயற்சி, மனித இயல்பு, ::- ஏற்றுக்கொண்டு     
    எப்பவும் கடைபிடிக்க வேண்டும்

    சோகம், துக்கம், சஞ்சலம், முரண்.:: தவிர்க்க வேண்டும்.


    ஆசை படுவது மனித இயல்பு

    தர்மத்துக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.

     நமக்கானதாக, நமக்கு தேவையானதாக இருக்கவேண்டும்

     பிறரை பார்த்து, ஒப்பீடலோ, பொறாமையாலோ, போட்டியாலோ,
     ளைந்ததாக இருக்கக்கூடாது

    ஆசை பட்டதை அடையக்கூடிய, நம்பிக்கை, விடாமுயற்சி இருக்கவேண்டும்.

    அறிவுசார்ந்த திட்டமிடுதல், செயல் இருக்க வேண்டும்.

    அதேசமயம்
   *நமக்கும்* 
   *மற்ற ஜீவன்களுக்கு, இந்த* *சமுதாயத்திற்கும்* 

   *சிந்தனை, சொல், செயலால்,* 
   *மனதாலோ, உடலாலோ* *சங்கடம், துன்பம்,* *ஏற்படக்கூடாது.* 

   நமது முயற்சியில் வெற்றி என்பது, நமது ஊழ்வினை கர்மாவை பொறுத்தது.

   புண்யகர்மா ஆதரவு, சந்தர்ப்பம் , அடையக்கூடிய நல்ல சூழல்களை கொடுக்கும்

   பாபகர்மா தடைகளையும், மனசஞ்சலத்தையும் கொடுக்கும்.

   நமது முயற்சியில், பாபகர்மாவை அழிக்க வல்ல இறை வழிபாடு கொள்ளவேண்டும்.

   இதன் மூலம் முயற்சி வெற்றி அடைய வழிகிடைக்கும்

   மிகுந்த  பாபகர்மா விரயத்தை கொடுக்கும், 

   ஏற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் முயற்ச்சி செய்யவேண்டும்.

   கர்மா குறையும்பொழுது வெற்றி கிடைத்து, நாம் எண்ணிய ஆசையை அடைவோம்.

   இத்துடன் இந்த பிறவி முடியும்,  கர்மாவும் கழிந்திருக்கும்.

   ஒரு ஞானியாக ஜென்மம் கடைதேறும்

   சீடர்களுக்காக
   ஷங்கர்

No comments:

Post a Comment