Thursday, August 8, 2019

Christian Daily Prayer,

14. அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
 சங்கீதம் 91::14

Prayer:
அற்புதமான இரட்சகரே!

உம்மை நம்பியிருக்கிறவர்களை உயர்த்துகிற வல்லமை கொண்டவர் நீர். ஆண்டவரே, இன்றைக்கு என்னையும் நினைத்தருளும். உம்மையே உறுதியாய் பற்றிக்கொள்கிற கிருபையை எனக்குத் தந்தருளும். அதன்மூலம் என்னுடைய குறைவுகள் யாவும் மாறி என் வாழ்க்கை செழிப்படைய கிருபை செய்தருளும். என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்தருளும். இவ்வுலக ஆசீர்வாதங்கள் மட்டுமல்ல ஆவிக்குரிய வாழ்விலும் ஆசீர்வாதத்தை பெற்று உயர உதவிச்செய்தருளும். என்னை கைவிடாமல் காக்கும்படி நான் தொடர்ந்து உம்மையே பற்றிக்கொள்ள இரக்கம் பாராட்டும். உமது நன்மையும் கிருபையும் என்னை தொடரட்டும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.



“நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதிப்பேன்.”
 ஆதியாகமம் 12:2

Prayer:
அன்பின் தேவனே,

என் பாரங்கள் அனைத்தையும் உம்மிடத்தில் சமர்ப்பிக்கிறேன். கர்த்தாவே, உம்முடைய ஆசீர்வாதங்களால் என்னை நிரப்பும். உம்முடைய வழிகளில் நான் நடக்க எனக்கு உதவும். எப்போதும் உம்மை தேடவும் உம்முடைய கற்பனைகளில் நிலைத்திருக்கும்படி எனக்கு உதவிச்செய்தருளும். உம்முடைய பிள்ளையாக உமது ஆசீர்வாதங்களை நானும் சுதந்தரிக்க எனக்கு உதவிச்செய்து என்னை உயர்த்தியருளும். உமக்குள் என் வாழ்க்கை கட்டி எழுப்பப்படட்டும். ஒவ்வொரு நடவடிக்கையிலும் நீர் என்னோடிருந்து, என்னை ஆசீர்வதித்தருளும். என்னை தாழ்த்தி உமது சமூகத்தில் அர்ப்பணிக்கிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.



“என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும்,....  உன்னை நிலைநிறுத்தினேன்” (யாத்திராகமம் 9:16)

Prayer:
அன்பின் தேவனே,

நீங்கள் எனக்காக கொடுத்த வாக்குத்தத்ததிற்காய் உமக்கு நன்றி. நீர் வார்த்தையில் உண்மையுள்ளவர். உம்மிலும் உமது வார்த்தையிலும் நான் கவனம் செலுத்த உதவிச்செய்தருளும். ஏற்ற நேரத்தில் ஏற்ற வார்த்தையின் மூலமாக நீர் என்னை கனம்பண்ணுவீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன்.  உமது சமூகத்தில் காத்திருக்கிறேன். உமது வல்லமையையும், பலத்தையும் எனக்குத் தந்தருளும். நீர் யாவற்றையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிக்கிறவர் என்பதை நான் அறிவேன். உமது வார்த்தையின்படியே ஏற்ற நேரத்தில் உமது நாம மகிமைக்காக என்னை உயர்த்தியருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.


தேவன் எல்லாவற்றையும் அறிந்தவர்!

“உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.”
 மத்தேயு 6:8

Prayer:
பரம தகப்பனே,

நான் கேட்பதற்கு முன்பே, என் தேவைகளை அறிந்து கொடுக்கிற நல்ல தகப்பன் நீர், என் தேவைகளுக்காக உம்மிடம் வருகிறேன். இந்த உலகத்தில் யாரையும்விட என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிற நீர் எனக்கு நல்ல ஈவுகளையே தருவீர். விசுவாசத்தினாலே உமது ஈவுகளை நான் பெற்றுக்கொள்கிறேன். நான் விரும்புவதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் மிகவும் அதிகமாய் என் தேவைகளை நீர் பூர்த்தி செய்வீர் என்று நான் விசுவாசத்துடன் அறிக்கை செய்கிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.


“நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை.”

 ஏசாயா 41:9

Prayer:
அன்புள்ள ஆண்டவரே,

நான் என் பெலவீனத்தையும் நோயையும் உமக்கு முன்பாக அர்ப்பணிக்கிறேன். நீர் தெரிந்துகொண்டவர்களை நீர் ஒருபோதும் கைவிடுகிற தேவனல்ல. உம்மைவிட்டு விலகச்செய்த என் பாவங்களை எனக்கு மன்னித்து, என் பலவீனத்திலிருந்து என்னை விடுவிக்கவும், என் நோயிலிருந்து என்னை குணமாக்கும்படியும் ஜெபிக்கிறேன். உமது அழைப்பை நான் அலட்சியம் செய்யாமல், அழைப்பிற்கு ஏற்ற பாத்திரமாய் உபயோகப்படும்படிக்கு என்னை வனைந்தருளும். இதன்மூலம் உமது நாமம் மகிமைப்படட்டும்.  உமது வார்த்தையை நான் நம்புகிறேன். நீர் என்னோடிருந்து உமது வல்லமையை வெளிப்படுத்தும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.


“நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்.”

 எரேமியா 1:5


Prayer:

என்னை நேசிக்கும் அன்பு தகப்பனே,

இந்த வார்த்தையின் மூலம் நீர் இன்று என்னோடு பேசியதற்காக உமக்கு நன்றி. என் தாயின் கர்ப்பத்தில் என்னை உருவாக்கியதற்கான நோக்கத்தை நான் அறிந்து கொண்டேன். உம்முடைய பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பி, உம்முடைய வார்த்தையை சுமந்து செல்லும் பாத்திரமாக என்னை உபயோகப்படுத்தும். உமது நாம மகிமைக்காக நான் நல்ல கனிகளை கொடுக்க உதவிச்செய்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.



“நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்”

 சங்கீதம் 91:16

Prayer:
அன்புள்ள பரலோகத் தகப்பனே,

நீர் உன்னதமானவர். உலகத்திலுள்ள ஆபத்திலிருந்தும், சடுதியான தாக்குதல்களிலிருந்தும் நீரே உம்முடைய பிள்ளைகளை பாதுகாக்கிறீர் என்று நான் நம்புகிறேன். தெய்வீக ஆரோக்கியத்தை எனக்கு தந்து, இந்த பூமியில் நீண்ட ஆயுளை கொடுத்து என்னை காத்தருளும். உமது பாதுகாக்கும் கரத்தை விட்டு நான் ஒருபோதும் விலகிச்செல்லாதபடி நீர் என்னை பாதுகாத்துக்கொள்ளும். நீர் கொடுத்த இந்த வாழ்க்கையில் உமது நோக்கத்தையும் திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்றுகிற மகனாக/மகளாக என்னை மாற்றியருளும். உம்முடைய ஆசீர்வாதத்தினால் நிரப்பும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.



No comments:

Post a Comment