Friday, August 9, 2019

Sai Baba Sayings

என் உதவி கண்டிப்பாக கிடைக்கும்.

துன்பம் வந்தபோதும் கூட என் மீது நம்பிக்கை குறைவுபடாமல் இருந்தால் அவர்களுக்கு என் உதவி கண்டிப்பாக கிடைக்கும்.-ஷிர்டி சாய்பாபா

முன் புறத்திலும், பின் புறத்திலும், நான் தென்படுவேன்

யார் எனக்கு உணவு அளிக்காமல் உட்கொள்ளமாட்டார்களோ, யார் என்னை எல்லா காரியங்களிலும் நினைத்துகொள்வார்களோ, அவர்களின் முன் புறத்திலும், பின் புறத்திலும், நான் தென்படுவேன்.- ஷிர்டி சாய்பாபா

நன் உன் கண் இமையைப் போன்றவன்

உன் நட்பு, காதல், அனுராகம், விஸ்வாசம் முதலியவற்றை என் மேல் வைத்திரு,
நன் உன் கண் இமையைப் போன்றவன். உன் முயற்சி இல்லாமலேயே நான் உன்னை காப்பாற்றுவேன். ஷிர்டி சாய்பாபா

கர்மங்களை குறைத்துக்கொள்ள

கர்மங்களை குறைத்துக்கொள்ள வழி, அதை தைரியமாக அனுபவிப்பதே, நீங்கள் எப்போதும் என்னை நினைதுக் கொண்டிருந்தால் என்மேல் நம்பிக்கை கொண்டிருந்தால், அதை அனுபவிக்கும் சக்தியை நான் கொடுக்கிறேன். அது துன்பம் என்ற எண்ணம் உங்களில் ஏற்படாமல் நான் செய்கிறேன். - ஷிர்டி சாய்பாபா


பாபாவின் விரதம்

பூரண சரணாகதியடைந்த பக்தனை எந்தவிதமான ஆபத்தும் வராமல் காப்பாற்றுவது பாபாவின்  விரதம். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா


சமமாகப் பார்க்கும் நிலை*

நான் எல்லோரையும் சமமாகப் பார்க்கும் நிலையை வாழ்வின் துவக்கம் முதல் கடைப்பிடித்து வருகிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. யாரையும் புண்படுத்துவதும் கிடையாது. ஷிர்டி சாய்பாபா


என்மேல் நம்பிக்கை இருந்தால்

என்மேல் நம்பிக்கை இருந்தால், என்னால் உனக்கு செய்ய முடியாத காரியம் என்று ஏதும் கிடையாது. ஷிர்டி சாய்பாபா.



என்னை நினைத்தவுடன் நான் அங்கிருப்பேன்

நான் இந்த பெளதீக உடலுடன் ஷீரடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன். என் வருகைக்கு எல்லைகள் இருக்க முடியாது. நீங்கள் என்னை நினைத்தவுடன் நான் அங்கிருப்பேன். ஷிர்டி சாய்பாபா


உங்கள் சேவையில் தன்யனாய் இருப்பேன்

நான் ஸ்தூல உடலுடன் ஷீரடியில் இல்லையென்று கருத வேண்டாம். என் மேல் நம்பிக்கை கொண்டு என்னை இதயபூர்வமாக நினைத்த  மறு நிமிடமே உன் முன்னால் இருப்பேன். எப்போதும் உங்களுடனேயே இருப்பேன். உங்களுக்கு தாசனாய் இருப்பேன். உங்கள் சேவையில் தன்யனாய் இருப்பேன்.உங்கள் காரியங்களில் என் உதவியை கோரினால் உடனே நிறைவேற்றுகிறேன். என்னை எப்போதும் நினைப்பவர்களின் கடனை அவ்விதமாகத் தீர்த்துக்கொள்வேன். சத்குரு ஷிர்டி சாய்பாபா


எல்லா வேலைகளிலும் உதவி செய்கிறேன்

உனக்கு ஒவ்வொரு வினாடியும் என்மேல்  நம்பிக்கையுண்டாவதற்கு, நான் நீங்கள் செய்யும் எல்லா வேலைகளிலும் உதவி செய்கிறேன். - ஷிர்டி சாய்பாபா

No comments:

Post a Comment