Friday, August 9, 2019

Sai Baba Sayings

என் உதவி கண்டிப்பாக கிடைக்கும்.

துன்பம் வந்தபோதும் கூட என் மீது நம்பிக்கை குறைவுபடாமல் இருந்தால் அவர்களுக்கு என் உதவி கண்டிப்பாக கிடைக்கும்.-ஷிர்டி சாய்பாபா

முன் புறத்திலும், பின் புறத்திலும், நான் தென்படுவேன்

யார் எனக்கு உணவு அளிக்காமல் உட்கொள்ளமாட்டார்களோ, யார் என்னை எல்லா காரியங்களிலும் நினைத்துகொள்வார்களோ, அவர்களின் முன் புறத்திலும், பின் புறத்திலும், நான் தென்படுவேன்.- ஷிர்டி சாய்பாபா

நன் உன் கண் இமையைப் போன்றவன்

உன் நட்பு, காதல், அனுராகம், விஸ்வாசம் முதலியவற்றை என் மேல் வைத்திரு,
நன் உன் கண் இமையைப் போன்றவன். உன் முயற்சி இல்லாமலேயே நான் உன்னை காப்பாற்றுவேன். ஷிர்டி சாய்பாபா

கர்மங்களை குறைத்துக்கொள்ள

கர்மங்களை குறைத்துக்கொள்ள வழி, அதை தைரியமாக அனுபவிப்பதே, நீங்கள் எப்போதும் என்னை நினைதுக் கொண்டிருந்தால் என்மேல் நம்பிக்கை கொண்டிருந்தால், அதை அனுபவிக்கும் சக்தியை நான் கொடுக்கிறேன். அது துன்பம் என்ற எண்ணம் உங்களில் ஏற்படாமல் நான் செய்கிறேன். - ஷிர்டி சாய்பாபா


பாபாவின் விரதம்

பூரண சரணாகதியடைந்த பக்தனை எந்தவிதமான ஆபத்தும் வராமல் காப்பாற்றுவது பாபாவின்  விரதம். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா


சமமாகப் பார்க்கும் நிலை*

நான் எல்லோரையும் சமமாகப் பார்க்கும் நிலையை வாழ்வின் துவக்கம் முதல் கடைப்பிடித்து வருகிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. யாரையும் புண்படுத்துவதும் கிடையாது. ஷிர்டி சாய்பாபா


என்மேல் நம்பிக்கை இருந்தால்

என்மேல் நம்பிக்கை இருந்தால், என்னால் உனக்கு செய்ய முடியாத காரியம் என்று ஏதும் கிடையாது. ஷிர்டி சாய்பாபா.



என்னை நினைத்தவுடன் நான் அங்கிருப்பேன்

நான் இந்த பெளதீக உடலுடன் ஷீரடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன். என் வருகைக்கு எல்லைகள் இருக்க முடியாது. நீங்கள் என்னை நினைத்தவுடன் நான் அங்கிருப்பேன். ஷிர்டி சாய்பாபா


உங்கள் சேவையில் தன்யனாய் இருப்பேன்

நான் ஸ்தூல உடலுடன் ஷீரடியில் இல்லையென்று கருத வேண்டாம். என் மேல் நம்பிக்கை கொண்டு என்னை இதயபூர்வமாக நினைத்த  மறு நிமிடமே உன் முன்னால் இருப்பேன். எப்போதும் உங்களுடனேயே இருப்பேன். உங்களுக்கு தாசனாய் இருப்பேன். உங்கள் சேவையில் தன்யனாய் இருப்பேன்.உங்கள் காரியங்களில் என் உதவியை கோரினால் உடனே நிறைவேற்றுகிறேன். என்னை எப்போதும் நினைப்பவர்களின் கடனை அவ்விதமாகத் தீர்த்துக்கொள்வேன். சத்குரு ஷிர்டி சாய்பாபா


எல்லா வேலைகளிலும் உதவி செய்கிறேன்

உனக்கு ஒவ்வொரு வினாடியும் என்மேல்  நம்பிக்கையுண்டாவதற்கு, நான் நீங்கள் செய்யும் எல்லா வேலைகளிலும் உதவி செய்கிறேன். - ஷிர்டி சாய்பாபா

Thursday, August 8, 2019

Christian Daily Prayer,

14. அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
 சங்கீதம் 91::14

Prayer:
அற்புதமான இரட்சகரே!

உம்மை நம்பியிருக்கிறவர்களை உயர்த்துகிற வல்லமை கொண்டவர் நீர். ஆண்டவரே, இன்றைக்கு என்னையும் நினைத்தருளும். உம்மையே உறுதியாய் பற்றிக்கொள்கிற கிருபையை எனக்குத் தந்தருளும். அதன்மூலம் என்னுடைய குறைவுகள் யாவும் மாறி என் வாழ்க்கை செழிப்படைய கிருபை செய்தருளும். என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்தருளும். இவ்வுலக ஆசீர்வாதங்கள் மட்டுமல்ல ஆவிக்குரிய வாழ்விலும் ஆசீர்வாதத்தை பெற்று உயர உதவிச்செய்தருளும். என்னை கைவிடாமல் காக்கும்படி நான் தொடர்ந்து உம்மையே பற்றிக்கொள்ள இரக்கம் பாராட்டும். உமது நன்மையும் கிருபையும் என்னை தொடரட்டும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.



“நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதிப்பேன்.”
 ஆதியாகமம் 12:2

Prayer:
அன்பின் தேவனே,

என் பாரங்கள் அனைத்தையும் உம்மிடத்தில் சமர்ப்பிக்கிறேன். கர்த்தாவே, உம்முடைய ஆசீர்வாதங்களால் என்னை நிரப்பும். உம்முடைய வழிகளில் நான் நடக்க எனக்கு உதவும். எப்போதும் உம்மை தேடவும் உம்முடைய கற்பனைகளில் நிலைத்திருக்கும்படி எனக்கு உதவிச்செய்தருளும். உம்முடைய பிள்ளையாக உமது ஆசீர்வாதங்களை நானும் சுதந்தரிக்க எனக்கு உதவிச்செய்து என்னை உயர்த்தியருளும். உமக்குள் என் வாழ்க்கை கட்டி எழுப்பப்படட்டும். ஒவ்வொரு நடவடிக்கையிலும் நீர் என்னோடிருந்து, என்னை ஆசீர்வதித்தருளும். என்னை தாழ்த்தி உமது சமூகத்தில் அர்ப்பணிக்கிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.



“என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும்,....  உன்னை நிலைநிறுத்தினேன்” (யாத்திராகமம் 9:16)

Prayer:
அன்பின் தேவனே,

நீங்கள் எனக்காக கொடுத்த வாக்குத்தத்ததிற்காய் உமக்கு நன்றி. நீர் வார்த்தையில் உண்மையுள்ளவர். உம்மிலும் உமது வார்த்தையிலும் நான் கவனம் செலுத்த உதவிச்செய்தருளும். ஏற்ற நேரத்தில் ஏற்ற வார்த்தையின் மூலமாக நீர் என்னை கனம்பண்ணுவீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன்.  உமது சமூகத்தில் காத்திருக்கிறேன். உமது வல்லமையையும், பலத்தையும் எனக்குத் தந்தருளும். நீர் யாவற்றையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிக்கிறவர் என்பதை நான் அறிவேன். உமது வார்த்தையின்படியே ஏற்ற நேரத்தில் உமது நாம மகிமைக்காக என்னை உயர்த்தியருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.


தேவன் எல்லாவற்றையும் அறிந்தவர்!

“உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.”
 மத்தேயு 6:8

Prayer:
பரம தகப்பனே,

நான் கேட்பதற்கு முன்பே, என் தேவைகளை அறிந்து கொடுக்கிற நல்ல தகப்பன் நீர், என் தேவைகளுக்காக உம்மிடம் வருகிறேன். இந்த உலகத்தில் யாரையும்விட என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிற நீர் எனக்கு நல்ல ஈவுகளையே தருவீர். விசுவாசத்தினாலே உமது ஈவுகளை நான் பெற்றுக்கொள்கிறேன். நான் விரும்புவதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் மிகவும் அதிகமாய் என் தேவைகளை நீர் பூர்த்தி செய்வீர் என்று நான் விசுவாசத்துடன் அறிக்கை செய்கிறேன்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.


“நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை.”

 ஏசாயா 41:9

Prayer:
அன்புள்ள ஆண்டவரே,

நான் என் பெலவீனத்தையும் நோயையும் உமக்கு முன்பாக அர்ப்பணிக்கிறேன். நீர் தெரிந்துகொண்டவர்களை நீர் ஒருபோதும் கைவிடுகிற தேவனல்ல. உம்மைவிட்டு விலகச்செய்த என் பாவங்களை எனக்கு மன்னித்து, என் பலவீனத்திலிருந்து என்னை விடுவிக்கவும், என் நோயிலிருந்து என்னை குணமாக்கும்படியும் ஜெபிக்கிறேன். உமது அழைப்பை நான் அலட்சியம் செய்யாமல், அழைப்பிற்கு ஏற்ற பாத்திரமாய் உபயோகப்படும்படிக்கு என்னை வனைந்தருளும். இதன்மூலம் உமது நாமம் மகிமைப்படட்டும்.  உமது வார்த்தையை நான் நம்புகிறேன். நீர் என்னோடிருந்து உமது வல்லமையை வெளிப்படுத்தும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.


“நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்.”

 எரேமியா 1:5


Prayer:

என்னை நேசிக்கும் அன்பு தகப்பனே,

இந்த வார்த்தையின் மூலம் நீர் இன்று என்னோடு பேசியதற்காக உமக்கு நன்றி. என் தாயின் கர்ப்பத்தில் என்னை உருவாக்கியதற்கான நோக்கத்தை நான் அறிந்து கொண்டேன். உம்முடைய பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பி, உம்முடைய வார்த்தையை சுமந்து செல்லும் பாத்திரமாக என்னை உபயோகப்படுத்தும். உமது நாம மகிமைக்காக நான் நல்ல கனிகளை கொடுக்க உதவிச்செய்தருளும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.



“நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்”

 சங்கீதம் 91:16

Prayer:
அன்புள்ள பரலோகத் தகப்பனே,

நீர் உன்னதமானவர். உலகத்திலுள்ள ஆபத்திலிருந்தும், சடுதியான தாக்குதல்களிலிருந்தும் நீரே உம்முடைய பிள்ளைகளை பாதுகாக்கிறீர் என்று நான் நம்புகிறேன். தெய்வீக ஆரோக்கியத்தை எனக்கு தந்து, இந்த பூமியில் நீண்ட ஆயுளை கொடுத்து என்னை காத்தருளும். உமது பாதுகாக்கும் கரத்தை விட்டு நான் ஒருபோதும் விலகிச்செல்லாதபடி நீர் என்னை பாதுகாத்துக்கொள்ளும். நீர் கொடுத்த இந்த வாழ்க்கையில் உமது நோக்கத்தையும் திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்றுகிற மகனாக/மகளாக என்னை மாற்றியருளும். உம்முடைய ஆசீர்வாதத்தினால் நிரப்பும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,

ஆமென்.



Monday, August 5, 2019

உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.*

*ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான்.*

*உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.*

1)   *அர்த்த தோஷம்.*
2)   *நிமித்த தோஷம்.*
3)   *ஸ்தான தோஷம்.*
4)   *ஜாதி தோஷம்.*
5)   *சம்ஸ்கார தோஷம்.*

1 )   *#அர்த்த  தோஷம்.*

*பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார். உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். அடடா என்ன தவறு செய்து விட்டோம் இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார். பணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார். தன் சீடனிடம் நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது என்று கேட்டார். வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான். இது பொருளால் வரும் தோஷம் அதாவது அர்த்த தோஷம்! அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம். நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.*

2)  *#நிமித்த  தோஷம்.*

*அடுத்தது நிமித்த தோஷம். உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதைக் கொண்டிருத்தல் அவசியம். நேர்மையானவராகவும், அன்பானவராகவும் நல்ல் சுபாவம் உடையவராகவும் அவர் இருத்தல் வேண்டும். அத்தோடு சமைக்கப்பட்ட உணவு நாய், எறும்பு, பல்லி, காகம் போன்ற ஜந்துக்களால் தொடப்படாமல் இருத்தலும் அவசியம். அப்படித் தொடப்பட்ட உணவுகள் அசுத்தமானவை. உணவில் தூசி, தலை மயிர், புழுக்கள் போன்றவையும் இருக்கக் கூடாது. பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன்  ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர் அம்மா நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் சொட்டுச் சொட்டாக வெளியேறும் போது நான் பரிசுத்தனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது” என்று கூறினார். அசுத்தமான உணவு அனர்த்தத்தையே விளைவிக்கும். தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உருவாக்கும். நல்லவன் சமைத்த உணவு நல்ல எண்ணங்களையே உருவாக்கும்.*

3)  *#ஸ்தான  தோஷம்.*

*அடுத்தது ஸ்தான தோஷம் எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். அது மட்டுமின்றி கழிப்பறை, மருத்துவமனை, யுத்த களம், கோர்ட் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல. துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். அவரோ மறுத்து விட்டார். அவரை சிறைப்பிடிக்கவும் அவன் முயன்றான். ஆனால் அவரோ நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள். எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கித் தின்ற கிருஷ்ணர் ஆனந்த முற்றார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர் விதுரா! நான் அன்பிற்காகத் தான் ஏங்குகிறேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி ஜலம், ஒரு இலை, ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும் என்று அருளினார். உள்ளன்புடன் உணவு படைக்கப்பட வேண்டியது அவசியம்.*

4 )  *#ஜாதி  தோஷம்.*

*அடுத்தது ஜாதி தோஷம். உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. புளிப்பு, உரைப்பு, உப்பு உள்ளவை ராஜஸிகமானவை. உள்ளிப்பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை. சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது. ராஜஸிக உணவு உலோகாயத உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது. தாமஸிக உணவு தீய பிசாசு குணத்தை வளர்க்கிறது.*

5)  *#சம்ஸ்கார  தோஷம்.*

*அடுத்தது சம்ஸ்கார தோஷம். தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை. ஆக இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். இன்றோ ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் என்று அசுத்த உணவை ஆரவாரத்துடன் சாப்பிடுகிறோம். அசைவ உணவைத் தயாரிக்கும அதே பாத்திரத்தில் தான் சாம்பார், அரிசி, பருப்பு போன்றவை தயாராகின்றன. தட்டுகள் உரிய முறைப்படி கழுவப்படுகிறதா இல்லையா என்று யாருக்கும் தெரியாது. மக்டொனால்ட், கெல்லாக் என்று இப்படி பிராண்டட் அயிட்டங்களில் மோகம் உச்சமடைந்திருக்கும் காலம் இது. அதன் விளைவையும் அனுபவித்துத்தானே ஆக வேண்டும். ஆசாரத்தைக் கடைப்பிடி என்றனர் ஆன்றோர். ஆசாரம் என்றால் சுத்தம். சாஸ்த்ராயச சுகாயச .தர்மோ ரக்ஷதி ரக்ஷித:*

Sunday, August 4, 2019

சீடர்களுக்காக ஷங்கர்

   
    சீடர்களுக்காக
    ஷங்கர்

    சிஷ்யகோடிக்களே

    நீங்களும் ஞானி தான்.

    உலக இயல்பை தெரிந்து, தெளிந்து, உணர்ந்து கொண்டால்,

   இயல்பை ஏற்றுக்கொண்டு, முரணை தவிர்த்தல், 

   மனஅமைதி கிட்டி, ஆத்ம சாந்தி கிடைக்கும்.

    புரிந்துகொள்வதற்கு:: சந்தோஷம், மகிழ்ச்சி, முயற்சி, மனித இயல்பு, ::- ஏற்றுக்கொண்டு     
    எப்பவும் கடைபிடிக்க வேண்டும்

    சோகம், துக்கம், சஞ்சலம், முரண்.:: தவிர்க்க வேண்டும்.


    ஆசை படுவது மனித இயல்பு

    தர்மத்துக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.

     நமக்கானதாக, நமக்கு தேவையானதாக இருக்கவேண்டும்

     பிறரை பார்த்து, ஒப்பீடலோ, பொறாமையாலோ, போட்டியாலோ,
     ளைந்ததாக இருக்கக்கூடாது

    ஆசை பட்டதை அடையக்கூடிய, நம்பிக்கை, விடாமுயற்சி இருக்கவேண்டும்.

    அறிவுசார்ந்த திட்டமிடுதல், செயல் இருக்க வேண்டும்.

    அதேசமயம்
   *நமக்கும்* 
   *மற்ற ஜீவன்களுக்கு, இந்த* *சமுதாயத்திற்கும்* 

   *சிந்தனை, சொல், செயலால்,* 
   *மனதாலோ, உடலாலோ* *சங்கடம், துன்பம்,* *ஏற்படக்கூடாது.* 

   நமது முயற்சியில் வெற்றி என்பது, நமது ஊழ்வினை கர்மாவை பொறுத்தது.

   புண்யகர்மா ஆதரவு, சந்தர்ப்பம் , அடையக்கூடிய நல்ல சூழல்களை கொடுக்கும்

   பாபகர்மா தடைகளையும், மனசஞ்சலத்தையும் கொடுக்கும்.

   நமது முயற்சியில், பாபகர்மாவை அழிக்க வல்ல இறை வழிபாடு கொள்ளவேண்டும்.

   இதன் மூலம் முயற்சி வெற்றி அடைய வழிகிடைக்கும்

   மிகுந்த  பாபகர்மா விரயத்தை கொடுக்கும், 

   ஏற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் முயற்ச்சி செய்யவேண்டும்.

   கர்மா குறையும்பொழுது வெற்றி கிடைத்து, நாம் எண்ணிய ஆசையை அடைவோம்.

   இத்துடன் இந்த பிறவி முடியும்,  கர்மாவும் கழிந்திருக்கும்.

   ஒரு ஞானியாக ஜென்மம் கடைதேறும்

   சீடர்களுக்காக
   ஷங்கர்